CCMC NEWS 11.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, சரவணம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.780 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் (பில்லூர்-II), ரூ.362.20 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த அன்னூர், சூலூர் அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய திட்டப்பணிகளை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் முன்னிலையில் தொடங்கிவைத்தார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ஆ.ராசா, திரு.கு.சண்முகசுந்தரம், திரு.பி.ஆர்.நடராஜன், நகராட்சி நிருவாக குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் திரு.தா.கார்த்திகேயன் இ.ஆ.ப., குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் திரு.வ.தட்சிணா மூர்த்தி இ.ஆ.ப., நகராட்சி நிருவாக இயக்குநர் திரு.சு.சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன்,
மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மோ.ஷர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.