CCMC NEWS 11- 11.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.48க்குட்பட்ட ஹரிபுரம், சித்தாபுதூர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (11.03.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.பிரபா ரவீந்திரன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.கனகராஜ், திரு.பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.