CCMC NEWS 11- 06.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.32க்குட்பட்ட சண்முகா நகரில் சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (06.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.பார்த்திபன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.