CCMC NEWS 10- 24.02.2024

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஆய்வகம் மற்றும் குடிநீர் சுத்திகரிக்கும் பகுதிகளுக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் இன்று (24.02.2024) நேரில் பார்வையிட்டு குடிநீரின் தரம், இருப்பு குறித்தும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.அஸ்லாம் பாஷா, மாநகரப் பொறியாளர் திரு.முருகேசன், மாநகராட்சி உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், திரு.சத்தியமூர்த்தி, திரு.நாசர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் திரு.ஜான்சன், திரு.மாதேசன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.