Skip to content
CCMC NEWS 1 - 29/02/2024
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.46க்குட்பட்ட இரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன் வீதியில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் (எல்&டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட்) கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழங்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், ஆகியோர் முன்னிலையில் இன்று (29.02.2024) திறந்து வைத்தார். உடன் மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, எல்&டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாகி திரு.ரவி கட்டாரியா, நிர்வாக தலைவர் திரு.அமுல்கேத்திரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.முருகேஸ்வரி, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் திருமதி.கவிதா பப்பி, திருமதி.ஆண்டாள், உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், உதவி பொறியாளர் திரு.சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.