CCMC NEWS 1- 24.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 15-க்குட்பட்ட கே.என்.ஜி.புதூர் பிரதான சாலையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (24.02.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணிகளை விரைவில் முடித்து, பணி நிறைவுபெற்ற இடங்களில் உடனடியாக தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தாமணி, உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் திருமதி.மஞ்சுளா, மாநகராட்சி சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.