CCMC NEWS 1 -19.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட விவேகானந்தர் தெரு, ராமகிருஷ்ணாபுரம், ஸ்ரீவாரி குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க வேண்டுமென அறிவுரை வழங்கி, குப்பைகளை முறையாக தூய்மைப்பணியாளர்களிடம் வழங்காதவர்களுக்கு அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர் 19.02.2024.