CCMC NEWS 1 -15.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தன்னார்வலர் மூலம் (CRI PUMPS) புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்காக இன்று(15.03.2024) திறந்து வைத்தார். உடன் மண்டல குழு தலைவர் திருமதி.மீனாலோகு, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா ராமநாதன், சி.ஆர்.ஐ.பம்ப் சமூகப் பொறுப்புணர்வு மேலாளர் திரு.ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.