CCMC NEWS 1 -14.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண். 10க்குட்பட்ட சரவணம்பட்டி, எஸ்.பி.எஸ்.நகரில் ரூ.318.90 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியான சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி மற்றும் வெள்ளக்கிணறு உள்ளடக்கிய ஒன்பது வார்டுகளின் பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் சேகரிக்கும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் இன்று (14.03.2024) துவக்கி வைத்தார்கள். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.கவிதா, திரு.கதிர்வேலுசாமி, திரு.பழனிசாமி (எ) சிரவை சிவா, திருமதி.பூங்கொடி சோமசுந்தரம், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் திரு.செல்லமுத்து, நிர்வாக பொறியாளர் திரு.செந்தில்குமார், உதவி நிர்வாக பொறியாளர் திரு.பட்டன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.எழில், உதவி நகர திட்டமிடுநர் திருமதி.சத்யா, மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.சக்திவேல், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.