CCMC NEWS 1 - 12.03.2024

கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் இன்று (12.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.விஜயகுமார், திரு.பாபு, மாநகரப்பொறியாளர் திரு.முருகேசன், உதவி பொறியாளர்கள் திரு.சத்தியமூர்த்தி, திரு.சக்திவேல், திரு.நாசர் ஆகியோர் உள்ளனர்.