CCMC NEWS 1- 07.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.99.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 வகுப்பறைகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் இன்று (07.03.2024) மாணவ, மாணவியர்களை கொண்டு பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், மாநகரப்பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.இளங்கோவன், பள்ளி தலைமையாசிரியர், ஆகிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் உள்ளனர்.