CCMC NEWS 07.09.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி கவுண்டம்பாளையத்தில் ரூ.12.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 மெகாவாட் சூரிய சக்தி கூடிய மின் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு.எஸ்.விஜயகுமார் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் தமிழ்நாடு நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவனத்தின் முதுநிலை துணைத்தலைவர் திரு.ராஜேந்திரன், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் திரு.எஸ்.ராமமூர்த்தி, மாநகரப் பொறியாளர் திருமதி.சுகந்தி, உதவி ஆணையாளர் திரு.மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர்கள் திரு.இளங்கோவன், திரு.முருகேசன், நகரமைப்பு அலுவலர் திரு.குமார், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.சத்யா, உதவி பொறியாளர் திரு.ஜீவராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.