CCMC NEWS 04.09.2023

கோயம்புத்தூர் மாவட்டம், செல்வபுரம், புட்டுவிக்கியில் 230/110 KV டிஜிட்டல் மையமாக்கப்பட்ட காற்று காப்பிடப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுகுழு தலைவர் திரு.அ.சௌந்தரபாண்டியன் அவர்கள் தலைமையிலான மதிப்பீட்டு குழு உறுப்பினர்களாகிய திரு.ப.அப்துல் சமது (மணப்பாறை), திரு.உடுமலை மு.ராதாகிருஷ்ணன் (உடுமலைப்பேட்டை), திரு.மு.பெ.கிரி (செங்கம்), திரு.ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), திரு.ஒய்.பிரகாஷ்(ஓசூர்) ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாநகராட்சி துணை மேயர் திரு.இரா.வெற்றிசெல்வன், மண்டலக்குழு தலைவர் திருமதி.ரா.தனலெட்சுமி, ஆகியோர் உள்ளனர்.