CCMC NEWS -03.04.2024

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (03.04.2024) கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட அவினாசி சாலை, லட்சமி மில்ஸ் சந்திப்பில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி அவர்கள் (20-கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 120 கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதி) நேரில் பார்வையிட்டு, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மத்திய மண்டல உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மேற்பார்வையாளர்கள் திருமதி.நிர்மலா, திரு.சிவசாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.