CCMC NEWS 03.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண் 70 க்குட்பட்ட சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (03.03.2023) 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவ குருபிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தனர். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.இரா. வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர் திரு.சிவக்குமார், பொது சுகாதாரக் குழு தலைவர் திரு.பெ. மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர் திருமதி.ஷர்மிளா, நகர்நல அலுவலர் மரு. வசந்த்திவாகர், மாநகராட்சி மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உள்ளனர்.