CCMC NEWS 02.09.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.12க்குட்பட்ட மணியகாரம்பாளையம் வழியாக நல்லாம்பாளையம் செல்லும் சாலையில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்காக தற்போது குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவரும் சாலையில் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, குழாய் பதிக்கும் பணிகள் நிறைவுற்றவுடன் சாலையை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள். உடன் உதவி ஆணையர் (பொ) திரு.மு.நூர் அகமது, உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், உதவி பொறியாளர்கள் திரு உத்தமன், திரு.இளங்கோ, மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 02.09.2023