CCMC NEWS 01.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4க்குட்பட்ட சரவணம்பட்டி, கந்தசாமி நகரில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டம் 2023-24ன்கீழ் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் பணிக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் திரு.கதிர்வேலுசாமி, திரு.பழனிசாமி (எ) சிரவை சிவா, திருமதி. பூங்கொடி சோமசுந்தரம், உதவி செயற்பொறியாளர் திரு.எழில், உதவி பொறியாளர் திரு.சக்திவேல், வட்டார கல்வி அலுவலர் எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் திரு.ரமேஷ்பாபு, பள்ளி தலைமையாசிரியர்(பொ) திருமதி.எலிசபெத், சுகாதார ஆய்வாளர் திரு.லோகநாதன் ஆகியோர் உள்ளனர் 01.02.2024.