CCMC NEWS 01-10-2023

நீலகிரி மாவட்டம், குன்னூரில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட சுற்றுலா பேருந்து விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி.செல்லம்மாள் (70), திருமதி.முப்பிடதாயி (65) ஆகியோருக்கு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியாக தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப, மாநகராட்சி ஆணையாளர் (பொ) திருமதி.செல்வ சுரபி, மாநகராட்சி துணை மேயர் திரு.வெற்றிச்செல்வன், அரசு கல்லூரி முதல்வர் மரு.நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.