CCMC Happy Street 18.09.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி மற்றும் தி டைம்ஸ் ஆப் இந்தியா ஒருங்கிணைந்து கோவை மாநகரில் வாகனமில்லா போக்குவரத்து, நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் நடத்திய (Happy Streets) "மகிழ்ச்சியான தெருக்கள்' நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள், மாநகர காவல் ஆணையாளர் திரு.வே.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சுதாகர் இ.கா.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், மேற்கு மண்டல காவல் துறை துணைத்தலைவர் திரு.முத்துசாமி இ.கா.ப., ஆகியோர் மிதிவண்டி பயணத்தினை துவக்கி வைத்தார்கள். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் திரு.அழகுஜெயபாலன், தி டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தினர் மற்றும் பலர் உள்ளனர் 18.09.2022.