Coimbatore Corporation - Commissioner Inspection3 - 30.07.22
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.35க்குட்பட்ட இடையர்பாளையம், பாரி நகர் பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியபோது எடுத்த படம். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் திரு.சம்பத், உதவி ஆணையாளர் திரு.சேகர், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி. கலாவதி, உதவி பொறியாளர் திரு.ஜீவராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம், சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.07.2022.