Coimbatore Corporation - Commissioner Inspection 1 - 01.08.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.2க்குட்பட்ட துடியலூர் சேரன் காலனியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி, குடிநீர் விநியோகம் குறித்து அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார். உடன் மாநகரப் பொறியாளர் (பொ) திரு.எஸ்.அரசு, மாமன்ற உறுப்பினர் திருமதி.புஷ்பமணி அருள்குமார், உதவி ஆணையாளர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.முருகேசன், உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.விமலா, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 01.08.2022.