Coimbatore Corporation - 3news 23.04.22

கோயம்புத்தூர் மாவட்டம், பீளமேடு, பூ.சா.கோ பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் இன்று (23.04.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு.க.நந்தகுமார் இ.ஆ.ப., இல்லம் தேடிக் கல்வி சிறப்புப்பணி அலுவலர் திரு.கே.இளம்பகவத் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்காரா இ.ஆ.ப. கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாநகராட்சி துணை மேயர் திரு.ஆர்.வெற்றிசெல்வன், தொடக்கக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர்.க.அறிவொளி, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.