Coimbatore Corporation - 3news 05.05.22

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான காமராஜர் சாலையில் மதுக்கரைக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு, உடைப்பை விரைந்து சரிசெய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். உடன் கிழக்கு மண்டல உதவி ஆணையர் திருமதி.மாரிச்செல்வி, 54-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.எஸ்.பாக்கியம், உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் திரு.ராதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.