Coimbatore Corporation - 2news 08.05.22

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்தில் சீர்மிகுநகரத்திட்டத்தின்கீழ் வார்டு எண்.83க்குட்பட்ட ஆடிஸ் வீதியில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணியை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். உடன் கூடுதல் தலைமைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருமான திரு.சிவதாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.சண்முகசுந்தரம் அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் .. மரு.மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் திருமதி .மீனாலோகு, பணிக்குழு தலைவர் திருமதி.சாந்திமுருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், மாநகரப் பொறியாளர் (பொ) திரு.ராமசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 08.05.2022.