CCMC NEWS 24.05.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் மாநகரப் பொறியாளர் திருமதி.சுகந்தி, உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் ஆகியோர் உள்ளனர் 24.05.2023.