CCMC NEWS 19.05.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் நகர பேருந்துநிலையத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் கோடை காலத்தில் வெய்யிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், ஓ.ஆர்.எஸ் ஆகியற்றை வழங்கி, தொப்பி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.மோ.ஷர்மிளா, திரு.க.சிவகுமார், மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, பொதுசுகாதார குழுத்தலைவர் திரு.பெ.மாரிச்செல்வன், பணிகள் குழுத்தலைவர் திருமதி.சாந்திமுருகன், மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா இராமநாதன், உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ். செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, நகரமைப்பு அலுவலர் திருமதி.கருப்பாத்தாள், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 19.05.2023