CCMC NEWS 17.03.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம். வார்டு எண்.50க்குட்பட்ட உடையாம்பாளையம், கருவலூர் மாரியம்மன் கோவில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறை வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.கீதா, உதவி ஆணையர் திரு.முத்து இராமலிங்கம், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம், உதவி பொறியாளர்கள் திரு.ஸ்ரீனிவாசன், திரு.கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளர் திரு.ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 17.03.2023