CCMC NEWS 07.06.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தின் 3வது தளத்தில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் 2 அறைகள் கட்டுமானப்பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் திருமதி.வி.சுமா, உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, நிர்வாக அலுவலர் திரு.எஸ்.கணேஷ்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.விமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 07.06.2023