CCMC News - 01.12.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 19க்குட்பட்ட தங்கம்மாள் நகர் மற்றும் பாலமுருகன் நகர் பகுதிகளில் தார் சாலை செப்பனிடும் பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வரும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல் அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 01.12.2022.