CCMC news - 01.11.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 72க்குட்பட்ட மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.120 இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி மலர் அங்காடி கடைகளை புனரமைத்தல் பணியினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா அவர்கள் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, கல்விக் குழுத்தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், நகரமைப்புக் குழுத்தலைவர் திரு.சோமு(எ)சந்தோஷ், மாமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நாகராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மலர் அங்காடி வியாபார சங்க உ நிர்வாகிகள் உள்ளனர் 01.11.2022.