CCMC - Independence day2022

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த மாநகராட்சி அலுவலர்கள் 29 பேருக்கு நற்சான்றிதழ்களை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் வழங்கினார்கள். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் (பொ) திரு.எஸ்.அரசு, மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 15.08.2022