CCMC-8 13.08.2022

75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தி கிரீன் பவுண்டேசன் சார்பில் மாநகராட்சியில் 75 இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8-க்குட்பட்ட சசி அவென்யூ பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். உடன் இந்திய விமான நிலைய இயக்குநர் திரு.செந்தில்வேலவன், கிழக்கு மண்டல உதவி ஆணையர் திரு.முத்துராமலிங்கம், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, உதவிப் பொறியாளர் திரு.குமார், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளனர் 14.08.2022.