CCMC 17.09.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.67க்குட்பட்ட வ.உ.சி பூங்கா அருகில் ரூ.4.64 கோடி மதிப்பீட்டில், 42.200 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா இராமநாதன், உதவி ஆணையர் (பொ) திரு.மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் திரு.சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 17.09.2022.